kavithai for tea | தேனீர் | கவிதை | poem about tea | Nynarin Unarvugal

இயற்கையின் ரகசியங்களை
அம்பலப்படுத்தியது
யாரோ எவரோ
இந்த இலை காலம் முழுவதும்
வன்கொடுமைக்கு
ஆளாகி கொண்டிருக்கிறது.

மனிதனின் வியக்கத்தக்க
கண்டுபிடிப்புகளில் இதுவும் ஒன்று.
ஒரு தாவரத்தின் தியாகத்தை
கடமையாக கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

உறக்கத்தை விரட்ட
இதை தேடுவார்கள்.
ஆதியில் எதை தேடும்போது
இது கிடைத்ததோ.

அசதியை அவிழ்க்க
பத்து ரூபாய் போதும்.
சேவையின் தேவைக்கு
கற்பிழந்து போய்விடுகிறது
இந்த பச்சையம்.

பசியை பகைக்க
விருந்தாளியாக இது
கௌரவிக்கப்படும்.
விருந்தாளிகளுக்கெல்லாம்
முதல் பலி இதுதான்.

இரவோ பகலோ
வாகன ஓட்டிகளுக்கு
இதுவே துணை.
பனியையும் வெயிலையும்
ஒரு காலத்தில்..
இது விழுங்கியது காரணமோ.

ஆரியமும் திராவிடமும்
கூட்டணி அமைத்து
வெற்றி காண்பது இதில்தான்.
இதன் பின்னனியில்
இருக்கும் அரசியல்..
குருதி சிந்தும் அன்றாட நிகழ்வு.

பாதை எங்கும் கொதித்திருக்கும்
இந்த தேயிலை
பயணத்தை முடுக்கிவிட்டு
தன் வரலாற்றை முடித்துக் கொள்கிறது.

எல்லோரும் தேநீர் என்பார்கள்
என்னை பொருத்தமட்டில்
இது..
உற்சாகத்தை வம்புக்கு இழுக்கும்
மூன்று நிமிட முத்தம்.
💢💢💢💢💢💢💢💢
நயினாரின் உணர்வுகள் 

Post a Comment

Previous Post Next Post