புத்தகம் கவிதை|books kavithai|tamil kavithai|Nynarin Unarvugal

பல வருட..
அனுபவங்களை
சில நிமிடங்களில்..
வாழ்ந்து காட்டும்.
📖
பல பக்கங்களை
புரட்ட வைத்து..
ஒரு பக்கத்தை
புரிய வைக்கும்.
📖
படுக்கை அறையோ
பாதாள சிறையோ
மடியில் விழுந்தே..
மயங்கி கிடக்கும்.
📖
இறந்த காலத்தையும்
வருங்காலத்தையும்
நிகழ் காலத்தில் காட்டும்
மாயக் கண்ணாடி
📖
விழிகளிடம் வேலையை
வாங்கிவிட்டு..
உழைப்பை
மூளைக்கு சேமிக்க கொடுக்கும்.
📖
நேரத்தை விழுங்கிவிட்டு
பல வருடங்கள்..
மிச்சப்படுத்தியே
கையில் தரும்.
📖
விரியும்போதெல்லாம்
காதல் செய்யும்
மூடிய பின்னும்..
கலவி காணும்.

புத்தகம்.
📖📖📖
நயினாரின் உணர்வுகள்

Post a Comment

Previous Post Next Post